• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலத்துக்கான தேசிய விருதை 4வது முறையாக பெற்றது தமிழகம்

November 27, 2018 தண்டோரா குழு

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலத்துக்கான தேசிய விருதை தமிழகம் தொடர்ந்து 4வது முறையாக பெற்றுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை,தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் 9–வது இந்திய உடல் உறுப்பு தான தினம் நிகழ்வு இன்று டெல்லியில் நடந்தது.இந்நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் தொடர்ந்து 4 முறையாக முதல் இடம் வகிப்பதற்கான விருது வழங்கப்பட்டது.டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதற்கான விருது பெற்றார்.

அப்போது அவர் பேசுகையில்,

“தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் ஒரு பொது இயக்கமாகவே செயல்பட்டு வருகிறது.சமீபகாலமாக தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது அதிகரித்து வருகிறது.தானமாக பெற்ற உறுப்புகளை கொண்டு பல்வேறு உறுப்பு மாற்று சிகிச்சைகள் தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளில் சிறந்த 1000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மூலம் மாற்று அறுவை சிகிச்சைகள் தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. தேவைப்படுபவர்களுக்கு உறுப்புகள் ஒதுக்கீடு தொடர்பாகவும் ஆன்லைன் சேவைகள் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது” என்றார்.

மேலும் படிக்க