• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிடிவி தினகரன் – தொல். திருமாவளவன் திடீர் சந்திப்பு

November 27, 2018 தண்டோரா குழு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் திடீரென சந்தித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவுடன் தோழமை கட்சிகளாக விசிக, மதிமுக இருந்து வருகிறது. தேர்தல் சமயத்திலும் இக்கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அண்மையில் திமுக பொருளாளர் துரைமுருகன் ஒரு பேட்டியில், தேர்தல் தேதி அறிவித்தபிறகுதான் கூட்டணி குறித்து பேச முடியும் என்றும், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் நட்பு கட்சிகள்தான், கூட்டணி கட்சிகள் இல்லை என்றும் கூறியிருந்தார். இதனால், இந்த கட்சிகள் திமுக கூட்டணியில் இல்லையா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், கஜா புயலால் சேதத்தை சந்தித்த புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க டிடிவி தினகரன் சென்றார். அப்போது, வழியில் திருமாவளவன் சந்திக்க, இருவரும் பேசிக்கொண்டனர்.இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரன் – திருமாவளவன் ஆகியோரின் சந்திப்பு புதிய கூட்டணி உருவாகிறதா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க