• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அய்யா என் செருப்பைக் காணோம்! வாங்கி 2 நாள் தான் ஆகிறது – போலீசில் புகார் அளித்த தொழிலதிபர் !

November 26, 2018 தண்டோரா குழு

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது செருப்பை காணவில்லை என காவல் நிலயத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ்குப்தா(55) தொழிலதிபரான இவர்,பாரி முனையில் ஹார்டுவேர் கடை நடித்தி வருகிறார்.இவர் ரத்த பரிசோதனை செய்வதற்காக சென்ற போது தனது செருப்பை தொலைத்துள்ளார்.

இது தொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரை படித்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.அந்த புகாரில்,இன்று தண்டையார் பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சர்க்கரை நோய் பரிசோதனை மையத்திற்கு சென்றேன்.அந்த மையத்தின் வாசலில் என்னுடைய 800 ரூபாய் மதிப்புள்ள செருப்பை கழற்றி வைத்து சென்றேன்.பரிசோதனை முடிந்து வந்து பார்த்தபோது வாசலில் விட்டு சென்ற என்னுடைய செருப்பை காணவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்தான் அந்த செருப்பை வாங்கினேன்.ஆகையால் எனது செருப்பை திருடியவர்களை கண்டுபிடித்து செருப்பை மீட்டு தர வேண்டும் என புகார் தெரிவித்தார்.

இதையடுத்து,தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.படத்தில் வருவது போல இவர் செருப்பை காணவில்லை என்று புகார் அளித்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க