November 26, 2018
தண்டோரா குழு
உள்ளாட்சித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தியிருந்தால்,புயலால் இவ்வளவு பெரிய பாதிப்புக்குள்ளாக்காமல் மக்களை காத்திருக்கலாம் என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கஜா புயலின் கோரதாண்டவத்தால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான திருச்சி,தஞ்சாவூர்,நாகப்பட்டினம்,திருவாரூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளன.தென்னை மரங்கள்,வாழை,கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன.இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.தற்போது தொடர்ந்து மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில்,உள்ளாட்சித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தியிருந்தால்,புயலால் இவ்வளவு பெரிய பாதிப்புக்குள்ளாக்காமல் மக்களை காத்திருக்கலாம் என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“உள்ளாட்சி தேர்தல் உரிய நேரத்தில் நடந்திருந்தால்,உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களோடு சேர்ந்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டிருப்பார்கள்.அதன்மூலம்,மக்கள் இவ்வளவு பெரிய பாதிப்புக்கு உள்ளாகாமல் காத்திருக்கலாம்! என பதிவிட்டுள்ளார்”.