• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பிரபாகரன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய த.பெ.தி.க அமைப்பினர்

November 26, 2018 தண்டோரா குழு

விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு,கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பட்டாசு வெடித்தும்,கேக் வெட்டியும் கொண்டாடினர்.

தமிழீழ விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பிரபாகரன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.பட்டாசு வெடித்தும்,கேக் வெட்டியும் கொண்டாடிய அவ்வமைப்பினர், பிரபாகரனை வாழ்த்தியும்,தமிழீழம் மலரும் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.

இதைதொடர்ந்து பொதுமக்களுக்கு கேக்குகளை வழங்கினர்.விடுதலை புலிகளுக்கும்,தமிழீழத்திற்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் எனவும்,விரைவில் தமிழீழம் மலரும் எனவும் தபெதிகவினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க