• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றக்கிளை

November 26, 2018 தண்டோரா குழு

சர்கார் படத்துக்கு நவம்பர் 6 முதல் 16 வரை மதுரை மாவட்ட தியேட்டர்களின் வசூல் விவரங்களை ஆட்சியர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக்கிளை உத்திரவிட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிப்பில் கடந்த 6ம் தேதி வெளியான படம் சர்கார். இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இதற்கிடையில்,மதுரையில் சர்கார் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மகேந்திர பாண்டி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அதில் அரசாணையை பின்பற்றாமல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக விசாரித்த உயர்நீதி மன்ற மதுரை கிளை,மதுரையில் சர்கார் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? நவம்பர் 6 முதல் 16 வரை மதுரை மாவட்ட திரையரங்குகளின் தினசரி கட்டண வருவாய் அறிக்கையை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க