• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட பாஜக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

November 23, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட பாஜக சார்பில் ரூ.3லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டது.

உணவு பொருட்கள், பாய், மாவு வகைகள், பால் பவுடர், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் கோவை பாஜக மாவட்ட அலுவலகமான சித்தாபுத்தூரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன்,

புயல் வருவதற்கு முன்பாகவே மத்திய அரசு சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், புயலை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 க்கு பிறகு நாட்டின் எந்த மாநிலத்திலும் எந்த இயற்கை பேரிடர் போதும் தேசிய பேரிடராக அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டவர், தமிழக அரசுக்கு உதவ மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க