• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நினைவுத்திறனை அதிகரிக்கும் வல்லாரை கீரை சட்னி….!

November 23, 2018 tamil.webdunia.com

இயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது.ஆரோக்கியம் தந்து,ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

வல்லாரை கீரை – அரை கட்டு
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
மிளகு – கால் டீஸ்பூன்
புளி – ஒரு கோலி குண்டு அளவு
வெல்லம் – சிறிதளவு
எண்ணெய் – தேவைகேற்ப
உப்பு – தேவைகேற்ப
கடுகு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

கடாயில் சுத்தம் செய்து நறுக்கிய கீரை போட்டு வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய்,உளுத்தம் பருப்பு, மிளகு,சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.ஆறியதும் இரண்டு கலவையும் சேர்த்து உப்பு,புளி சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்து,கறிவேபில்லை போட்டு தாளித்து அதில் சேர்த்து இறக்கவும்.சுவையான ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை சட்னி தயார்.

மேலும் படிக்க