November 17, 2018
தண்டோரா குழு
சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்ட 1,000 கிலோ நாய்கறி எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரகசிய தகவலின் அடிப்படையில்,ரயில்வே போலீஸ் மற்றும் அதிகாரிகள் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில்,திடீர் சோதனை நடத்தினர்.அப்போது,ரயிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ நாய்கறியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இது சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல இறைச்சிக் கடையை நடத்தி வரும் கணேஷ் என்பவருக்கு வந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இவர் சென்னையில் உள்ள பல தனியார் உணவகங்களுக்கு இறைச்சி விற்பனை செய்து வருபவர் என்பதும் தெரியவந்துள்ளது.
சென்னை ஹோட்டல்களில் சிக்கன்,மட்டன்,பீப் இறைச்சிகளே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில் ஆயிரம் கிலோ நாய்கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அசைவ பிரியர்கள் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.