• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை உட்பட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !

November 16, 2018 தண்டோரா குழு

கஜா புயல் எதிரொலியாக கோவை உட்பட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,புயலாக மாறியது கஜா புயல்.இந்த கஜா புயல் நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்தது.இந்த கஜா புயல் நாகை,தஞ்சை,புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன்,

“கஜா புயல் இன்று காலை 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திண்டுக்கல் அருகே நிலை கொண்டு உள்ளது.இதன் காரணமாக மதுரை,திண்டுக்கல்,தேனி,திருப்பூர்,நீலகிரி,கோவை,கரூர்,திருச்சி,நாமக்கல் மாவட்டங்களில் 24 மணி நேரங்களில் கன அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.இம்மாவட்டங்களில்,காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கும்.இன்று மதியம் முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம்.மேலும் தெற்கு வங்கக்கடலின் மத்தியில் நவ18ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் நவ18ம் தேதி முதல் 20ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்”.

மேலும் படிக்க