November 15, 2018
தண்டோரா குழு
கோவையில் நடைபெற உள்ள உலக தெலுங்கு கூட்டமைப்பின் 25 வது ஆண்டு விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தெலுங்கு சமுதாயத்தினர் பலர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் வசிக்கும் அனைத்து தெலுங்கு சமுதாயத்தினரையும் இணைக்கும் விதமாக கடந்த பல ஆண்டுகளாக உலக தெலுங்கு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பின் 25 வது ஆண்டு விழா கோவையில் வரும் 18 ம்தேதி நடைபெற உள்ளது.இது குறித்து உலக தெலுங்கு கூட்டமைப்பின் கோவை மண்டல நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய கோவை மண்டல தலைவர் ரமா விஜயகுமார்,
“அரசியல் மற்றும் பல்வேறு பிரிவுகளை கடந்து உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தெலுங்கு சமுதாயத்தினர் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய கிருஷணகோபால் மற்றும் ரவிக்குமார்,இந்த விழாவில் தெலுங்கு சமுதாய மக்களின் பெருமைகளை கூறும் இசைநிகழ்ச்சிகள், கலை,நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும்,மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளதாக தெரிவித்தனர்”.