November 15, 2018
தண்டோரா குழு
காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்திற்கும்,கர்நாடகத்திற்கும் ஜீவநதியாக விளங்கி வருவது காவிரி. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகி கரைபுரண்டு ஓடி தமிழ்நாட்டில் வங்காள விரிகுடா கடலில் சங்கமம் ஆகிறது.கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணை அமைந்துள்ளது.
இந்நிலையில்,பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் கர்நாடக மாநில நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி சாரா ரமேஷ் ஆகியோர் தலைமையில் இரு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில்,மண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு அருங்காட்சியகம் கட்டப்படும்.அந்த அருங்காட்சியகத்தின் உச்சியில் காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கதீர்மானிக்கப்பட்டது.
மேலும்,அப்பகுதியில் புதிய ஏரி உருவாக்கப்பட்டு இந்த சிலையும்,அருகாமையில் 360 அடியில் கண்ணாடியால் ஆன இரு கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தனியார் மற்றும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் காவிரி தாய்க்கு சிலை நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.