• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் நுரையீரல் நோய் தொடர்பான பரிசோதனை முகாம்

November 14, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் நுரையீரல் தொற்று நோய்கள் தொடர்பான பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.இந்த முகாமில் நுரையீரல் பாதிப்புகள் வராமல் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.குறிப்பாக நுரையீரல் நோய் வராமல் தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்,நோய் பாதிப்பு வந்தால் உடனடியாக சரி செய்ய எடுக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

குறிப்பாக புகை பிடிப்பவர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு தொழிற்சாலையில் இருந்து வரும் நச்சு புகையால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதால் அதனை தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முறைகள குறித்தும் இந்த முகாமில் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.மேலும் நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறியவும்,அதனை நிவர்த்தி செய்வது குறித்த பரிசோதனையும் இந்த முகாமில் அளிக்கப்பட்டது.இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க