• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பணமதிப்பிழப்பை செய்த மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

November 9, 2018 தண்டோரா குழு

பணமதிப்பிழப்பை செய்த மத்திய அரசை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணமதிப்பிழப்பை செய்த மத்திய அரசை கண்டித்து தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பிஜேபி மோடி அரசை கண்டித்து காந்தி பார்கில் வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பணம் இழப்பு மக்களுக்கு பணம் குவிப்பு உங்களுக்கா என்றும்,இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை மதத்திற்கான ஆட்சி என்றும் இது காவி ஆட்சி அண்ணாச்சி கருப்பு பணம் என்னாச்சு.கோடி ஊழல் மோடி ஆட்சி ஓடி விடுவாய் ஒளிந்து விடுவாய் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் பதாகைகள் ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் ஏராளாமான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க