• Download mobile app
07 May 2026, ThursdayEdition - 3739
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்கார் பட விவகாரம் முன் ஜாமீன் கேட்டு ஏ.ஆர். முருகதாஸ் மனு

November 9, 2018 தண்டோரா குழு

சர்கார் பட சர்ச்சை விவகாரத்தில்,அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் சர்கார்.இப்படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.இதற்கிடையில்,படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான சில கருத்துகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுகவை மறைமுகமாக சாடும் விதமாக நிறைய வசனங்கள் காட்சிகள் மற்றும் அதிமுகவின் திட்டங்கள் குறித்தும்,அதிமுக தலைவர்களின் பெயரை மறைமுகமாக குறிப்பிடும் வகையிலும் சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து,தமிழகம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சில இடங்களில் திரையங்கிகளில் வைப்பட்டுள்ள விஜயின் பேனர்களை அதிமுக தொண்டர்கள் கிழித்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே நேற்று நள்ளிரவு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய அவரது வீட்டுக்குக் காவல்துறை விரைந்துள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.மேலும்,முருகதாஸ் வீட்டில் இல்லாததைத் தெரிந்துகொண்ட போலீஸ் சென்று விட்டனர் என்றும் தெரிவித்திருந்தது.

ஆனால்,வழக்கமான ரோந்துப் பணிக்காகவே அவரது வீட்டின் அருகே சென்றோம்.கைது செய்வதற்காக அல்ல என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று காலை சர்கார் பட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதை ஏற்ற நீதிபதி இன்று பிற்பகல் இந்த வழக்கு விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க