November 3, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் ஸ்டாலின் மீது சேலம் நீதிமன்றத்தில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளது.
சேலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது தமிழக அரசு மீது அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மீது அரசு வழக்கறிஞர் தனசேகரன் 2 பிரிவுகளின் கீழ் சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.