November 3, 2018
தண்டோரா குழு
அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் சிலை அமைக்க உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
குஜராத்தின் நர்மதை நதிக்கரையில் 182 மீட்டர் உயரத்தில்உலகிலேயே மிக உயர்ந்த சிலையாக உருவாக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் சிலையை,பிரதமர் மோடி கடந்த 31-ம் தேதி திறந்து வைத்தார்.இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சரயு நதிக்கரையில் பிரம்மாண்டமான ராமர் சிலை ஒன்றை அமைக்க மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெண்கலத்தில் சிலை அமைக்கப்பட உள்ளதாகவும்,சிலைக்கான பீடத்தை 36 மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 6-ம் தேதி தீபாவளியன்று உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிடுவார் என கூறப்படுகிறது.தற்போது திட்ட மதிப்பு குறித்து சுற்றுலா மற்றும கலாச்சாரத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.