• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிலிப்பைன்ஸ் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு மேலும் 67 பேர் கவலைக்கிடம்

September 3, 2016 தண்டோரா குழு

பிலிப்பைன்ஸ் நாட்டில் தாவோ நகரத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் சுமார் 14 பேர் பலியாகியுள்ளனர் 67பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தாவோ நகரில் நேற்று இரவு நேர மார்கெட் பகுதியில் திடீரென குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் சுமார் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 67 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 24 பேரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாப் பயணிகள் அதிகமானோர் வந்து தங்கும் மார்கோ போலோ ஓட்டல் அருகில் இந்தக் குண்டு வெடிப்பு நடந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர். இறந்தவர்கள் அல்லது படுகாயம் அடைந்தவர்களின் எத்தனைப் பேர் வெளிநாட்டினர் என்ற விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிகாரிகள், இது கடந்த இரு தினங்களுக்கு முன் ராணுவத்தால் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கமாகத் தெரியவருகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து நாட்டின் பாதுகாப்பு முழுவதும் காவல்துறையின் கையில் இருந்து ராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க