• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மினியேச்சர் கலைகளில் சாதனை படைத்துள்ள கோவை இளைஞர்

October 25, 2018 பூங்கொடி

சிற்ப கலைகள் ஆரம்பத்தில் பாறைகளில் தொடங்கி பின்பு களிமண்ணில் செய்ய தொடங்கினர்.பாறைகளில் ஆரம்பித்த சிற்பம் தற்போது அரிசி,சோப்பு,மணல் என பல்வேறு வடிவங்களை தண்டி தற்போது பென்சில் கலைகளாக மாறியுள்ளது.

மைக்ரோ ஆர்ட் என்று சொல்லக்கூடிய நுண்கலை திறமையால் அனைவரின் கவனத்தை ஈர்த்த கோவை சேர்ந்த பொறியல் பட்டதாரியான இளைஞன் எம்.சவீத்ரு பென்சில்,சோப்,மரக்கட்டை,சாக்பீஸ்களில் சிற்பங்களை வடிவமைத்து அசத்தி வருகிறார்.இதுவரை தமிழ் எழுத்துக்களான உயிர் எழுத்து,மெய் எழுத்து மற்றும் அரசியல் தலைவர்களான பெரியார்,பகத்சிங்,அன்னை தெரசா,புத்தர்,கார்டூன் CHARACTERS,ஆகிய சிற்பங்களை திறம்பட செதுக்கி இருக்கிறார்.இவை அனைத்தும் 3 மி.மீ. உயரத்துக்குள் மிக நுண்ணியமாக செய்யப்பட்டவை.இந்த உருவங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு துல்லியமாகக் இருக்கின்றது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 18ம் தேதியன்று தஞ்சாவூரில் பென்சிலில் உலகளவில் சிறிய செஸ் போர்ட்,சிற்ப உருவப்படம்,உலகளவிலான 36 பொம்மைகளுடன் 9 படிக்கட்டுகளுடன் சிறிய கொலு வைத்து சாதனை படைத்துள்ளார்.மேலும்,உருப்பெருக்கிக் கண்ணாடியையும்,கத்தியையும் வைத்துக்கொண்டு மிகப் பிரபலமான உருவங்களை எல்லாம் செதுக்கி தற்போது யூனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து சவீத்ருவிடம் பேசுகையில்,

“பொறியல் படிப்பு முடிந்ததும் ஒரு வருடம் பேஷன் டிசைனர் வேலைக்கு போனேன்.ஆனாலும் கலைகள் மீதுதான் என் ஆர்வம் முழுவதும் இருந்து வந்தது. ஒருகட்டத்தில் வேலையை விட்டுவிட்டு,முழு நேர கலைஞராக மாறிவிட்டேன்.

எனக்கு சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம்.தனது பள்ளி பருவத்தில் அதிகமாக சிற்ப கலைகளை பார்த்து,முதல் முறையாக சிற்பங்களை சோப்பில் முயற்சி செய்தன் அது நன்றாக வரவும்,மேலும் வேற எதாவது பண்ண வேண்டும் என்ற யோசித்து மரக்கடை,கரிக்கட்டை,THERMACOL என பண்ண தொடங்கி கடைசியாக பென்சில் பண்ண தொடங்கினேன்.ஆரம்பத்தில் பென்சிலில் உருவங்களைச் செதுக்குவது மிகவும் சவாலான பணியாக இருந்தது.ஆரம்பத்தில் ஏராளமான தோல்விகள்,எவ்வளவு பென்சில்கள் உடைந்தன என்பதற்கு கணக்கே இல்லை.

ஒரு கட்டத்தில் மினியேச்சர் ஆர்ட் பொருட்கள் மக்களை கவர்ந்தது.கோவை ஆவாரம்பாளையத்தில் கடை தொடங்கினேன்.சில சமயங்களில் அவர்கள் விரும்பும் டிசைன்கள் செய்யச்சொல்லி ஆர்டர்கள் வரும்,வாடிக்கையாளர்களின் விருப்பப்படி செய்து கொடுத்து வருகிறேன்.இதற்கு முதலீடு பெரிய அளவில் இருக்காது. போதுமான வருமானம் எனக்கு கிடைக்கிறது.கொஞ்சம் பயிற்சியும் கிரியேட்டிவிட்டியும் இருந்தால் போதும்,வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைன்களில் செய்து கொள்ளலாம்.நமக்குத் தோன்றுகின்ற டிசைன்களையும் செய்து விற்பனை செய்யலாம்.விருப்பமானவர்களுக்கு பரிசுப் பொருளாக கொடுப்பதற்காக மைக்ரோ ஆர்ட் பொருட்களை ஆர்டர் செய்கிறார்கள்.பென்சிலில் ஆர்ட் செய்வதற்கு சாதாரணமாக பயன்படுத்தப்படும் பென்சில்,கார்பென்டர் ஒரு நைஃப் தேவைப்படும்.

மேலும்,என் நீண்ட நாள் கனவு உலகிலே சிறிய அளவு பென்சில் செதுக்கி கின்னஸ் சாதனை வாங்க வேண்டும்.தற்போது யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரெகார்டில் மூன்று பென்சில்கள் செதுக்கி சாதனை படைத்து விட்டேன்.அடுத்ததாக பென்சில்,ஸ்டோன்வுட்டில் மியூசியம் செய்ய வேண்டும்.மற்றும் நான் செய்த அனைத்து பென்சில்களையும் மீயூசியம் அமைத்து அதில் பார்வைக்கு வைக்க வேண்டும்.மைக்ரோ ஆர்ட் பயிற்சி கலையை வளர்ப்பதற்கு பெண்கள்,மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறேன்” .இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க