October 16, 2018
தண்டோரா குழு
ஆன் லைனில் பட்டாசு விற்பனைசெய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த சேக் தாவூத் என்பவர்உரிய உரிமங்கள் இல்லாமல் ஆன் லைனில் பட்டாசுகள் விற்பனை செய்வதைத் தடைசெய்யும்படி, வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி, காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடக் கோரி,சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.அம்மனுவில், விதிகளை முறையாக பின்பற்றாமல், ஆன்லைனில் பட்டாசு விற்கப்படுகிறது. ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் அதிகளவில் சீனப்பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், உள்நாட்டு விற்பனையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன்,ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளதுடன், இது குறித்து வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி, சென்னை போலீஸ் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவ.,15க்கு ஒத்தி வைத்தார்.