• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நவ.,15ல் கருணாநிதியின் வெண்கல சிலை திறப்பு அறிவிப்பு

October 15, 2018 தண்டோரா குழு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவை வரும் நவம்பர் 15ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவையடுத்து,கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில்,கலைஞருக்கு சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன்,

“கலைஞரின் சிலை நவம்பர் 15ம் தேதி திறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தச் சிலை திறப்பு விழாவில்,காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி,சீதாராம் யெச்சூரி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அக்டோபர் 17ம் தேதி நடக்கும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த முன்னோட்ட விஷயங்களை ஆலோசிப்போம் என்றும் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட மாட்டாது” எனக் கூறினார்.

மேலும் படிக்க