October 12, 2018
தண்டோரா குழு
முகத்திரைகளை கிழிக்கும் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.இந்தியாவில் #Metoo என்னும் ஹாஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை தைரியமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள் தற்போது #MeToo இயக்கத்தின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறி வருகின்றனர்.
திரையுல பிரபலங்கள் தொடங்கி,பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.இதற்கிடையில்,தமிழகத்தில் பின்னணி பாடகி சின்மயி Metoo இயக்கம் மூலம் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்.இதையடுத்து, #MeToo குறித்து பல்வேறு திரை பிரலங்ககள்,அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,இந்த மீடு இயக்கத்திற்கு திமுக எம்.பி கனிமொழி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“முகத்திரைகளை கிழிக்கும் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும்.#Metoo பிரச்சாரம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்தும் எனக் கூறியுள்ளார்”.