• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜக இளைஞரணி ஆலோசனை கூட்டம்

October 12, 2018 தண்டோரா குழு

திராவிடக் கட்சிகள் போன்று பணத்தை கொடுத்து வாக்குகள் பெற அவசியம் இல்லையென்றும்,மத்திய அரசால் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மக்களிடம் தெரிவித்து வாக்குகள் சேகரிப்போம் என பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற பாஜக இளைஞரணி பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் தலைமை வகித்த அவர் இதனை தெரிவித்தார்.கோவை பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாஜக நிர்வாகிகள்,பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சுந்தராபுரம் பகுதியில் நடைபெற்றது.இந்த கூட்டத்தின் போது,குறிச்சி பகுதி மற்ற கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் 100பேர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 67,654 சாவடிகளுக்கு நிர்வாகிகளை நியமித்து இளைஞர்கள் தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் ஒரு பகுதியாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்து வருவதாகவும்,மேலும் கரூர்,கோவையை தொடர்ந்து நீலகிரி,சேலம்,நாமக்கல் ஆகிய பாராளுமன்ற தொகுதியில் இளைஞரணி ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க