• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிக்கு இழப்பீடு வழங்கிய கேரள அரசு

October 10, 2018 தண்டோரா குழு

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீதான சதி வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்ற கேரள அரசு அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடை வழங்கியது.

இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றி வந்த நம்பி நாராயணன் மீது 1994ஆம் ஆண்டில் வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தொடர்பான விவரங்களை உளவு பார்த்து,மாலத்தீவு பெண்கள் மூலம் வெளிநாட்டுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.இந்த வழக்கில் 1994ம் ஆண்டு,நவம்பர் 30ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன்,சசிக்குமார் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நம்பி நாராயணன் 50 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.

இதற்கிடையில்,இந்த வழக்கு கேரள போலீசாரிடம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட பிறகு,நம்பி நாராயணன் மீது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கண்டறியப்பட்டு,வழக்கு 1996ம் ஆண்டில் முடிவடைந்தது.உச்சநீதிமன்றமும் நம்பி நாராயணனை குற்றச்சாட்டுகளில் இருந்து 1998ம் ஆண்டில் விடுவித்தது.மேலும், நம்பி நாராயணனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி சிக்க வைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி நம்பி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்திரவிட்டு இருந்தது.

இந்நிலையில்,நேற்று தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை நம்பி நாராயணனிடம் முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார்.

மேலும் படிக்க