• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை, நீலகிரி, மதுரை, குமரிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்

October 5, 2018 தண்டோரா குழு

ரெட் அலர்ட் எதிரொலியடுத்து கோவை, நீலகிரி, மதுரை, குமரிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 5 குழுவினர் விரைந்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.,7) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்று, குறைந்த நேரத்தில், 20.5 செ.மீ., மழை பதிவாகும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவின் உதவியை தமிழக அரசு கோரியது. இதனையடுத்து 5 தேசிய பேரிடர் மீட்புக்குழு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. நீலகரி, கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 5 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புறப்பட்டுள்ளனர்.

இதில், நீலகிரி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா ஒரு மீட்புக்குழுவும், கன்னியாக்குமரி மாவட்டத்திற்கு 2 மீட்புக்குழுவினரும் புறப்பட்டு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கு சென்று வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ள இடங்களில் இருந்து மக்களை மீட்க தயார் நிலையில் வைக்கப்படுவர் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க