• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் !

October 4, 2018 தண்டோரா குழு

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

டில்லியில் நடைபெறும் இந்தியா -ரஷ்யா 19-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். இதற்காக இந்தியா வருகை தந்துள்ள விளாதிமிர் புதினை டெல்லி விமான நிலையத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேரில் சென்று வரவேற்றார். புதின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்கவுள்ளார். அப்போது இரு நாட்டுத் தலைவர்களிடையே 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன.

மேலும், ரஷ்யாவிடம் இருந்து 36 ஆயிரத்து 792 கோடி ரூபாய் மதிப்பீட்டில், எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தமும் அப்போது கையெழுத்தாகிறது. ரஷ்யாவுடன் இந்தியா மேற்கொள்ளும் இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், இந்தியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க