• Download mobile app
04 May 2026, MondayEdition - 3736
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாக்கடையை தூர்வாரிய புதுவை முதல்வரை பாராட்டி பிரதமர் மோடி ட்வீட்

October 2, 2018 தண்டோரா குழு

சாக்கடையை தூர்வாரிய புதுவை முதல்வர் நாராயணசாமியை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

புதுவை மாநில முதல்வர் நாராயணசாமியின் சொந்த தொகுதி நெல்லித்தோப்பு.இதையடுத்து,இன்று காலை சொந்த தொகுதியான நெல்லித்தோப்பில் நாராயணசாமி இன்று தூய்மை பணியை மேற்கொண்டார்.அப்போது,நெல்லித்தோப்பு மார்க்கெட் அருகேயுள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை கவனித்த முதல்வர் நாராயணசாமி,வாய்க்காலில் இறங்கி குப்பைகளை அகற்றி தேங்கி நின்ற கழிவுநீரை அகற்றினார்.அவரது இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

இந்நிலையில்,புதுவை முதல்வர் நாராயணசாமியை பாராட்டி உங்களது இந்த செயல் தூய்மை இந்தியா திட்டத்திற்கு பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்க