• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2018ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு !

October 2, 2018 தண்டோரா குழு

2018ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா,பிரான்ஸ்,கனடாவை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக,பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹாம் நகரில் 2018ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய முறையை கண்டுபிடித்ததால் 2018ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பி அலிசான் மற்றும் டஸ்கு ஆகியோருக்கு நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,இந்த ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு,அமெரிக்காவை சேர்ந்த ஆர்தர் அஷ்கின், பிரான்சை சேர்ந்த ஜெரார்டு மவுரு,கனடாவை சேர்ந்த டோனோ ஸ்டிரிக்லேண்ட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. லேசர் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பில் ஈடுபட்டதற்காக பரிசு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க