• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபல வயலின் இசைக்கலைஞர் பாலபாஸ்கர் மரணம்

October 2, 2018 தண்டோரா குழு

கேரளாவில் கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த வயலின் இசைக்கலைஞர் பாலபாஸ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபல மலையாள இசையமைப்பாளரும் வயலினிஸ்டுமான பாஸ்கர் தனது மனைவி மற்றும் தனது 2 வயது மகள் தேஜஸ்வினி பாலாவுடன்,கடந்த மாதம் 28ஆம் தேதி காரில் திருச்சூர் சென்று விட்டு திரும்பினார்.

பள்ளிப்புரம் அருகே வந்த போது,திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.இந்த விபத்தில்,2வயது மகள் தேஜஸ்வினி பாலா,சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பாஸ்கர்,அவரது மனைவி மற்றும் டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில்,பாலபாஸ்கர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் கேரள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க