• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிடா விருந்தில் இளைஞர் கொலை;பாஜக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு

October 2, 2018 தண்டோரா குழு

கோவையில் கிடா விருந்தின் போது விநாயகர் சதுர்த்தி வரவு செலவு கணக்கு பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பா.ஜ.க உறுப்பினர் நாகராஜ் என்பவரை,பா.ஜ.க இளைஞர் அணி நிர்வாகி குட்டி(எ)கந்தசாமி பாட்டிலால் குத்தியதில் உயிரிழந்தார்.

கோவை ஆலாந்துறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி வசூல் பணத்தில் கடந்த 30ம் தேதி பா.ஜ.க வினர் மதுவுடன் கிடா விருந்து வைத்துள்ளனர்.இந்த விருந்தில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.அதில்,விருந்து முடித்து 35பேர் சென்ற நிலையில்,துடியலூரை சேர்ந்த பாஜக உறுப்பினர் நாகராஜ்,நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த பாஜக இளைஞரணி நிர்வாகி குட்டி(எ) கந்தசாமி உட்பட 5 பேர் எழுவாய்கள் சாலை கணபதிக்காரர் தோட்டத்தில் மது அருந்தியுள்ளனர்.

அப்போது,விநாயகர் சதுர்த்தி வரவு செலவு கணக்கு பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் கந்தசாமி மது பாட்டிலால் குத்தியதில் நாகராஜ் படுகாயமடைந்தார்.இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இச்சம்பவம் தொடர்பாக ஆலந்துறை காவல்துறையினர்,தலைமறைவாக உள்ள பா.ஜ.க மாவட்ட இளைஞரணி நிர்வாகி கந்தசாமியை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க