கோவை அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை தாசில்தாராக பொறுப்பு வகித்த அப்துல் ரகுமான் சிகிச்சை பலனின்றி பலியானார்.
கூடலூரில் வட்டாட்சியராக இருந்தவர் அப்துல் ரகுமான்(43).ஆதிதிராவிடர் நலத்துறை துணை தாசில்தாராக பொறுப்பு வகித்து வரும் இவர் ஊட்டியில் உள்ள பழைய அறவங்காடு பகுதியில் வசித்து வருகிறார்.இவரின் சகோதரர் கார்கில் போரில் வீரமரணம் அடைந்துள்ளார்.இதனால் இவருக்கு அரசு பணியில் வேலை வாய்ப்பு கிடைத்தது.
இவர் கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நீலகிரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் இவர் கடந்த 29ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் இவரது உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.
நாடு தழுவிய ஐ கேர் மான்ஸூன் சர்வீஸ் கேம்ப் இசுசு மோட்டார்ஸ் இந்தியா நடத்துகிறது
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்