• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பருவமழை வரவுள்ளதால் கோவை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை தீவிரம்

October 1, 2018 தண்டோரா குழு

வடகிழக்கு பருவமழை அதிகளவு பொழியும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டு உள்ள நிலையில் கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை இன்னும் சில தினங்களில் தமிழகத்தில் துவங்கவுள்ளது.சராசரியை விட அதிகளவு மழை இருக்கும் என காலநிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்,அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மருத்துவமனைகளில் தண்ணீர் தேங்காமல் கண்காணிக்க வேண்டும் என அரசு சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.வெளிநோயாளிகள்,உள்நோயாளிகள்,பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் கூடுதல் முன்னேற்பாடுகளை செய்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் தற்போது 15 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்ந்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.கோவை மாவட்ட சுகாதாரத் துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.மழை காலங்களில் வரும் நோய் தாக்குதலை தடுக்க குடிநீர் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்னர் பயன்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க