• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெ.வைக் குற்றவாளியாக அறிவிக்க கோரிய கர்நாடக அரசின் மனு தள்ளுபடி!

September 28, 2018 தண்டோரா குழு

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவிக்கக் கோரிய கர்நாடகா அரசின் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மறைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,சசிகலா,சுதாகரன்,இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள் ஜெயலலிதா மறைந்ததால் இவ்வழக்கிலிருந்து அவரை விடுவித்தனர்.

இதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது.அம்மனுவில் ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுதித்தது ஏற்புடையதாக இல்லை எனவும் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகே ஜெயலலிதா மறைந்தார்.எனவே,வழக்கில் அவரையும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மறுசீராய்வு மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் மதன் பி லோகர் ஆகியோரது அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது கூறிய நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பில் தலையிடப்போவதில்லை என்றும்,முந்தைய தீர்ப்பு சரியாகத்தான் உள்ளது என்று கூறி,கர்நாடக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததோடு மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க