• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெ.வைக் குற்றவாளியாக அறிவிக்க கோரிய கர்நாடக அரசின் மனு தள்ளுபடி!

September 28, 2018 தண்டோரா குழு

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவிக்கக் கோரிய கர்நாடகா அரசின் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மறைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,சசிகலா,சுதாகரன்,இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள் ஜெயலலிதா மறைந்ததால் இவ்வழக்கிலிருந்து அவரை விடுவித்தனர்.

இதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது.அம்மனுவில் ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுதித்தது ஏற்புடையதாக இல்லை எனவும் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகே ஜெயலலிதா மறைந்தார்.எனவே,வழக்கில் அவரையும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மறுசீராய்வு மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் மதன் பி லோகர் ஆகியோரது அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது கூறிய நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பில் தலையிடப்போவதில்லை என்றும்,முந்தைய தீர்ப்பு சரியாகத்தான் உள்ளது என்று கூறி,கர்நாடக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததோடு மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க