• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் மோடிக்கு சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது !

September 27, 2018 தண்டோரா குழு

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ளது என ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று நடத்துவதற்காகவும், வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்று உறுதியேற்றதற்காகவும் பிரதமர் மோடிக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றியதற்காக 6 பேர் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண துணிச்சலாகவும், புதுமையாகவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்ட அவர்களை கவுரவப்படுத்தும் வகையில் இந்த விருது அவர்களுக்கு அளிக்கப்படுகிறது என்று ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், பாரத பிரதமர் மோடி உள்ளிட்ட 6 பேர் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளுக்கு சம்பியான்ஸ் ஆஃப் தி எர்த் என்ற விருதை அறிவிக்கபட்டுள்ளது. அதைபோல் உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு சூரியசக்தி மின்சாரத்தை மட்டும் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்ட கொச்சி விமானநிலைதிற்க்கும் விருது வழங்கப்பட உள்ளது என ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க