• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாக்கை அறுப்பேன் என்ற வார்த்தை வாய் தவறி வந்துவிட்டது – அமைச்சர் துரைக்கண்ணு

September 27, 2018 தண்டோரா குழு

நாக்கை அறுப்பேன் என்ற வார்த்தை வாய் தவறி வந்துவிட்டது என்று வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார்.

அதிமுக சார்பில் அண்மையில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் துறைண்ணு, தமிழக அரசுவறட்சியிலும் வளர்ச்சி கண்டு வருகிறது.தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ்., தஞ்சை மண்ணின் மைந்தன் வைத்திலிங்கம் இருக்கும் வரை இந்த ஆட்சியை, கட்சியை எவராலும் அசைக்க முடியாது. இந்த ஆட்சியை லஞ்ச ஆட்சி என தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன் என பேசினார்.

இதையடுத்து அமைச்சரின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நாக்கை அறுப்பேன் என்ற வார்த்தை வாய் தவறி வந்துவிட்டது. யாரையும் தனிப்பட்ட முறையில் பேசவில்லை, அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என அமைச்சர் துரைகண்ணு கூறியுள்ளார்.

மேலும் படிக்க