பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“பேரறிவாளன் வழக்கு தொடர்பான 3 கோப்புக்களை இன்று ஆளுநர் மாளிகையில் பன்வாரிலாலை சந்தித்து வழங்கியுள்ளேன்.அதில்,வழக்கில் பல குளறுபடிகள் இருப்பதாக,தீர்ப்பளித்த நீதிபதி தாமஸ் கூறிய கருத்து,படுகொலை குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் எழுதிய புத்தகம்,பேரறிவாளனின் வாக்கு மூலத்தை முழுமையாகப் பதிவிடவில்லை என CBI முன்னாள் அதிகாரி தியாகராஜன் கூறிய வீடியோ குறுந்தகடு என பல தகவல் கோப்புகளும் இந்த கோப்புகளுடன் இணைத்துள்ளேன்.28 ஆண்டுகள் காத்திருந்து காத்திருந்து பல முறை ஏமாந்திருந்தாலும் இந்த முறை பேரறிவாளன் விடுதலை தொடர்பாக நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது”.இவ்வாறு பேசினார்.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !