• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர்கள் பதவி விலக கோரி திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம்

September 18, 2018 தண்டோரா குழு

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் தமிழக அமைச்சர்களை பதவி விலக கோரி கோவையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் தமிழக அமைச்சர்களை பதவி விலகக் கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது,ஆளும் அரசின் முக்கிய துறைகளை வைத்திருக்கும் அமைச்சர்களே ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருப்பதால் அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும்,ஊழல் குறித்து வெளிப்படையான விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,திமுக துணைப் பொதுசெயலாளர் வி.பி.துரைசாமி , சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் , முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் பேட்டியளித்த திமுக துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி உலக வங்கியின் விதிமுறைகளை மீறி முதல்வரின் உறவினர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டு இருப்பதாகவும்,உயர் நீதிமன்றம் அதை கணக்கில் எடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் குட்கா வழக்கில் லஞ்சம் கொடுத்த மாதவராவ் கைது செய்யப்பட்ட நிலையில்,லஞ்சம் வாங்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.இந்தியாவிலேயே அதிகளவு ஊழல் செய்தவர் கோவை மாவட்ட அமைச்சர் வேலுமணி என தெரிவித்த அவர்,பிளிசிங் பவுடர்,பினாயில் போன்றவற்றிலும் எஸ்.பி வேலுமணி ஊழல் செய்து இருக்கின்றார் என தெரிவித்தார்.இதே போல பொது விநியோகத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க