September 11, 2018
தண்டோரா குழு
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபரை சிபிசிஐடி சிறப்பு படையினர் இன்று கைது செய்தனர்.
கோவையில் 1998.,பிப்.,14 ம் தேதி,பல்வேறு இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 58 பேர் கொல்லப்பட்டனர்.250 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.1998 ல் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பு வழக்கில் நோகு(எ)ரசீது என்பவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது.இதனால் ரசீது தலைமறைவாகினார்.
இந்நிலையில்,20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வரை சிபிசிஐடி சிறப்பு படையினர் இன்று கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட ரசீது கோவை 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.