• Download mobile app
02 Feb 2026, MondayEdition - 3645
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார் ? உயர்நீதிமன்றம் கேள்வி

September 10, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார் என்று தெரிவிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வருமான வரிகணக்கு தாக்கல் தொடர்பான வழக்கு ஓன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார் என்றும் ஜெயலலிதா உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என்பது குறித்த விவரங்களை தெரிவிக்கவும் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை இம்மாதம் 26ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்றம்.

மேலும் படிக்க