• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓரினச்சேர்க்கை தொடர்பான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் முழக்கமிட்ட மதபோதகர்

September 10, 2018 தண்டோரா குழு

ஓரினச்சேர்க்கை குற்றம் என்ற சட்டத்தை நீக்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கிருஸ்தவ மத போதகர் ஒருவர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்பதை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 தெரிவித்திருந்தது.இந்த சூழலில்,அந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்றும்,இது தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த சட்டத்தை நீக்கி உத்தரவு பிறப்பித்தது. இதனால்,ஒட்டுமொத்த ஓரினச்சேர்க்கையாளர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.இந்நிலையில்,உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்று கூறியும்,அந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் கிருஸ்தவ மத போதகரான ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பெலிக்ஸ் ஜெபசிங் என்பவர் முழக்கங்களை எழுப்பினார்.இதனால் நீதிமன்ற வளாகத்துக்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க