• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓரினச்சேர்க்கை தொடர்பான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் முழக்கமிட்ட மதபோதகர்

September 10, 2018 தண்டோரா குழு

ஓரினச்சேர்க்கை குற்றம் என்ற சட்டத்தை நீக்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கிருஸ்தவ மத போதகர் ஒருவர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்பதை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 தெரிவித்திருந்தது.இந்த சூழலில்,அந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்றும்,இது தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த சட்டத்தை நீக்கி உத்தரவு பிறப்பித்தது. இதனால்,ஒட்டுமொத்த ஓரினச்சேர்க்கையாளர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.இந்நிலையில்,உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்று கூறியும்,அந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் கிருஸ்தவ மத போதகரான ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பெலிக்ஸ் ஜெபசிங் என்பவர் முழக்கங்களை எழுப்பினார்.இதனால் நீதிமன்ற வளாகத்துக்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க