• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வழித்தட பிரச்சனை தொடர்பாக 13 வயது சிறுவன் மாவட்ட ஆட்சியரிடம் மனு

September 3, 2018 தண்டோரா குழு

கோவையில் வழித்தட பிரச்சனை தொடர்பாக 13 வயது சிறுவன் மாவட்ட ஆட்சியரிடம் தனியாக வந்து இன்று மனு அளித்தார்.

கோவை மைல்கல் பிள்ளையார் பகுதியை சேர்ந்தவர்கள் நாகேந்திரன் – பூங்கொடி தம்பதி.இவர்களது வீட்டுக்கு செல்லும் வழித்தடம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகின்றது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க திட்டமிட்டிருந்தனர்.இந்நிலையில் பொது பணிசூழல் காரணமாக விடுமுறை கிடைக்காத காரணத்தால் தங்களது 13 வயது மகன் நவநீதகிருஷ்ணிடம் மனுவை கொடுத்து அனுப்பினர்.

பள்ளிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு வந்த மாணவன் நவநீதகிருஷ்ணன் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.பின்னர் வழித்தட பிரச்சனைக்காக பெற்றோரால் வர முடியாத காரணத்தால் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததாக பள்ளி மாணவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் படிக்க