இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில்,இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்று,தொடரை 3-1 என கைப்பற்றியது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்தாம்டனில் நடந்தது.இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்கள்,இந்தியா 273 ரன்கள் எடுத்தது.இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி,271 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இந்திய அணிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் களமிறக்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் (17),ராகுல் (0),புஜாரா (5) என சொற்ப ரன்களில் வெளியேறினர்.இதனால் இந்தியா 22 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.4-வது விக்கெட்டுக்கு கோலி உடன் ரகானே ஜோடி சேர்ந்தார்.இருவரும் வழக்கம் போல நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இந்நிலையில் கோலி (58) ரன்களிலும்,அரைசதம் அடித்து கைகொடுத்த ரகானே (51) வெளியேற,போட்டி இங்கிலாந்து அணி பக்கமாக திரும்பியது.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி 69.4 ஓவர்கள் முடிவில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இதன் மூலம் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு