• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் ஹரிகிருஷ்ணாவின் சடலத்துடன் செல்ஃபி எடுத்த ஊழியர்கள் நீக்கம்

September 1, 2018 தண்டோரா குழு

மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகன் ஹரிகிருஷ்ணாவின் சடலத்துடன் மருத்துவமனை ஊழியர்கள் செல்பி எடுத்துக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் மகனும்,நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி உயிரிழந்தார்.தெலங்கானா நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி- அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்றபோது,ஹரிகிருஷ்ணாவின் கார் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரிகிருஷ்ணா,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த நடிகர் ஹரிகிருஷ்ணாவின் சடலத்துடன் மருத்துவமனை ஊழியர்கள் 4 பேர் செல்ஃபி எடுத்துள்ளனர்.இந்த போட்டோவை சமூக வலைதளங்களிலும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.இதற்கு கண்டனங்களும்,எதிர்ப்புக்களும் குவிந்து வருவதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் 4 பேரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அவர்களின் இந்த செயலுக்காக மருத்துமனை நிர்வாகம் மன்னிப்பு கோரி உள்ளது.

மேலும் படிக்க