• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் கமல் கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட மாட்டார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

August 31, 2018 தண்டோரா குழு

நடிகர் கமல் கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட மாட்டார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி சாத்தூரில் சைக்கிள் பேரணி நடந்தது.இதனை தமிழக பால்வளத்துறை அமைச்சர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,

“முதல்வர் எடப்பாடி பழனிசாமி அம்மா வழியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.ஆனால் எதிர்க்கட்சிகள் அரசு மீது வீண் பழி சுமத்தி பொய் பிரசாரம் செய்கிறது.அதனை முறியடிக்கவே அ.தி.மு.க. சைக்கிள் பேரணி நடத்துகிறது.இதனால் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.மேலும், நடிகர்கள் ஆசைப்பட்டு அரசியலுக்கு வருகிறார்கள்.எத்தனை நடிகர்கள் கட்சிகளை தொடங்கினாலும் தமிழகத்தை திராவிட கட்சிகள் தான் ஆளும்.எம்.ஜி.ஆர். – ஜெயலலிதாவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு தற்போதுள்ள நடிகர்களுக்கு இல்லை.திருப்பரங்குன்றம் அம்மாவின் கோட்டை.அங்கு அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.அழகிரி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.நடிகர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.அவர் இந்த தேர்தலில் மட்டுமல்ல,எந்த தேர்தல் நடந்தாலும் போட்டியிட மாட்டார்.ஏனென்றால் தேர்தலில் போட்டியிட அவரது கட்சியில் ஆட்கள் இல்லை”இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க