• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎல் தொடரை கைப்பற்றியது மதுரை அணி

August 13, 2018 தண்டோரா குழு

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2018 தொடரில் மதுரை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2018 தொடர் தற்போது நடைப்பெற்று வருகிறது.இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்றது.இதில்,திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதியது.

இதில்,டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து, முதலில் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 117 ரன்கள் எடுத்தது.இதில்,கேப்டன் ஜெகதீசன் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் (51ரன்கள்) எடுத்தார்.

பின்னர் களமிறக்கிய மதுரை அணி 17.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன் முறையாக டிஎன்பிஎல் தொடரை கைப்பற்றியுள்ளது.

மேலும் படிக்க