• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டைமண்ட் லீக் தடகளத்துக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா தகுதி!

July 28, 2018 tamilsamayam.com

டைமண்ட் லீக் தடகள பைனல் போட்டிக்கு இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் வரும் 30ம் தேதி டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட டைமண்ட் லீக் தடகள பைனல் போட்டிகளின்,13வது சுற்று போட்டிகள் இதுவாகும்.

இதன் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். இவரைத்தவிர்த்து,உலக சாம்பியன் ஜோஹானஸ் வெட்டர்,ஒலிம்பிக் சாம்பியன் தாமஸ் ரோஹ்லர், டைமண்ட் லீக் சாம்பியன் ஜாகப் வாடெஜ்,ஜெர்மனி சாம்பியன் ஆண்டிரஸ் ஹாப்மேன், எஸ்தோனியன் சாதனையாளர் மாக்னஸ் கிர்ட் ஆகியோரும் தங்கள் இடத்தை உறுதி செய்தனர்.எஞ்சியுள்ள 2 இடங்கள், ஃபைனல் போட்டிக்கு முன்பாக நடக்கும் தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யப்படும்.

இந்நிலையில் அடுத்த மாதம் இந்தோனேஷியாவில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டு போட்டியிலும் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க