• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பலாத்கார வழக்கு : ஆறு சர்வதேச போட்டியிலிருந்து நீக்கப்பட்ட இலங்கையின் தனுஷ்கா குணதிலகா

July 27, 2018 tamilsamayam.com

இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கு எதிராக பலாத்கார புகார் எழுந்ததால்,ஆறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியேற்றியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா அணி 2 டெஸ்ட்,5 ஒருநாள் போட்டி, ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது.இந்த தொடரின் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வென்று அசத்தியது.

2வது டெஸ்ட் போட்டியில் வென்ற இலங்கை ஒரு புறம் மகிழ்ச்சியில் திழைத்தாலும்,மறுபுறம் நார்வே நாட்டை சேர்ந்த இரு பெண்களை இலங்கை தொடக்க வீரர் தனுஷ்கா குணதிலாவும் அவரது நண்பரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.இதனை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தனுஷ்கா குணதிலாவும் பாலியல் பலாத்கார புகாரில் சிக்கியுள்ளதால் போலீஸ் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் குணதிலாவை தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 5 ஒருநாள்,ஒரு டி20 போட்டி என 6 சர்வதேச போட்டிகளிலிருந்து விலக்குவதாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க