• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு நாகராஜா திருக்கோவில்

July 26, 2018 findmytemple.com

சுவாமி:நாகராஜர்.

மூர்த்தி:அனந்த கிருஷ்ணன்,சுப்ரமணிய சுவாமி,துர்க்கையம்மன்,ஸ்ரீ தர்ம சாஸ்தா.

தீர்த்தம்:நாகதீர்த்தம்.

தலவிருட்சம்:ஓடவள்ளி.

தலச்சிறப்பு:இக்கோவில் ஒரு நாகதோஷ பரிகார தலம்.இங்கு மாதக் கார்த்திகைகள் விசேஷம் தருவதாக கருதப்படுகிறது.இக்கோவிலுக்கு வெளியில் உள்ள தல விருட்சத்தை சுற்றி நாக சிலைகள் உள்ளன.இதில் மஞ்சள் மற்றும் பால் அபிஷேகம் செய்வது சிறப்பு ஆகும்.இந்த தலத்தில் மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது.கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது.வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது.இந்த நீருடன் சேர்ந்த மணலையே,கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

இந்த மணலானது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும்,தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருக்கிறது.இந்த தலத்தில் உள்ள துர்க்கை சிலை,இங்கு உள்ள நாக தீர்த்தத்தில் கிடைத்தது.அதனால் அன்னை “தீர்த்த துர்க்கை” என்று அழைக்கப்படுகிறாள்.துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து,நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

அருகிலுள்ள நகரம்:நாகர்கோயில்

இருக்குமிடம்:கன்னியாகுமரியிலிருந்து 20 கி.மீ.

கோயில்முகவரி:அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில்,நாகர்கோவில் – 629 001, கன்னியாகுமரி மாவட்டம்.

மேலும் படிக்க