• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் தொடரை கைப்பற்றியது இந்தியா

July 9, 2018 தண்டோரா குழு

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது 20-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து,இந்தியா அணிக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று(ஜூலை 8)நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களுக்கு எடுத்தது.அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 67 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.அடுத்து வந்த கே.எல்.ராகுல் 19 ரன்களிலும்,விராட் கோலி 43 ரன்களிலும் வெளியேறினர்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா 56 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து சதம் விளாசினார்.இறுதியில் இந்திய அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.இதன் மூலம் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

மேலும் படிக்க