• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் தொடரை கைப்பற்றியது இந்தியா

July 9, 2018 தண்டோரா குழு

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது 20-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து,இந்தியா அணிக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று(ஜூலை 8)நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களுக்கு எடுத்தது.அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 67 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.அடுத்து வந்த கே.எல்.ராகுல் 19 ரன்களிலும்,விராட் கோலி 43 ரன்களிலும் வெளியேறினர்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா 56 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து சதம் விளாசினார்.இறுதியில் இந்திய அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.இதன் மூலம் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

மேலும் படிக்க