• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்,பெல்ஜியம் அணிகள்

July 7, 2018 தண்டோரா குழு

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் தகுதி பெற்றுள்ளது.

21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன.இதில் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் முடிந்து,நேற்று முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்கியது.

இதில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் பிரான்ஸ் அணி,உருகுவே அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தில் முதல் பகுதியில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணியும், பிரேசில் அணியும் மோதியது.முதல் பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது.இரண்டாவது பாதி ஆட்டத்தில் பிரேசில் அணி வீரர் ரீனட்டோ அகஸ்டோ ஒரு கோல் அடித்தார்.முடிவில் பெல்ஜியம் அணி,2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

மேலும் படிக்க